Posts

3 நிறங்களில் அறிமுகமாகிறது ஹீரோவின் புதிய எக்ஸ்ட்ரீம் 160R

Image
இருசக்கர வாகன தயாரிப்பில் உலகின் முன்னனி நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ மோட்டோகார்ப் இன்று ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R ஐ அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160R, முதன்முதலாகக் கடந்த பிப்ரவரி மாதம் ஹீரோ வேர்ல்ட் 2020 என்ற நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. 1R கான்செப்ட் அடிப்படையில் இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. PS 6 அப்கிரேடுடன் ஃபியூல் இஞ்ஜெக்‌ஷன், ஏர் கூல்டு வசதியுள்ள 160 cc எஞ்சின் இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்சின் 15bhp பவர் மற்றும் 14 Nm டார்க்கைத் தருகிறது. புதிய எக்ஸ்ட்ரீம் 160R பைக், 0 முதல் 60 கி.மீ வேகத்தை வெறும் 4.7 விநாடிகளில் அடையும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. `பிஎஸ் 6 அப்கிரேடுடன் ஃபியூல் இஞ்ஜெக்‌ஷன், ஏர் கூல்டு வசதியுள்ள 160 சிசி எஞ்சின் இந்த பைக்கில் பொருத்தப்பட்டுள்ளது’. முன் சக்கரத்தில் 276 mm பெடல் டிஸ்க் பிரேக்கும் பின் சக்கரத்தில் 220 mm பெடல் டிஸ்க் பிரேக்கும் பொருத்தப்பட்டுள்ளன. LED ஹெட்லைட், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமண்ட் கிளஸ்டர், முன்பகுதியில் 13 mm டெலிஸ்கோபிக் ஃபோர்க்ஸ் மற்றும் பின்புறத்தில் 7 ஸ்டெப் அட்ஸ்ஜெஸ்ட் செய்யும் வகையிலான மோன...

கைவசமான ரத்தினக்கல்!’ -ஒரே இரவில் கோடீஸ்வரனான அதிசயம்

Image
வாழ்க்கையில் திடீரென ஏற்படும் திருப்புமுனையைக் கொண்டு ஒரே இரவில், ஒரே பாடலில் ஒரு நடிகர் பெரும் பணக்காரராக மாறுவதை பல்வேறு திரைப்படங்களில் பார்த்திருப்போம். ஏன்..? நம்மில் பலருடைய மனதிலும் `ஒரே இரவில் பணக்காரராக மாறினால் எப்படி இருக்கும்?' என்ற சிந்தனைகள் அவ்வப்போது தோன்றி மறைவது உண்டு. கனவிலும் திரைப்படத்திலும் காணும் இதுபோன்ற காட்சிகள் தான்சானியா நாட்டைச் சேர்ந்த ஒருவருக்கு நிஜ வாழ்விலேயே நடந்துள்ளது. அவரும் அந்நிகழ்வின் மூலம் ஒரே நாளில் கோடீஸ்வரர் ஆகியுள்ளார். ஆப்பிரிக்க கண்டத்தில், 6.2 கோடி மக்கள்தொகையைக் கொண்ட ஏழ்மையான நாடு தான்சானியா. இந்த நாட்டில் இருக்கும் சுரங்கங்களில் ரத்தினங்கள், தங்கம், வைரம் போன்றவை இயல்பாகவே கிடைப்பது வழக்கம். இருப்பினும் அந்நாடு ஏழை நாடாகவே இருந்து வருகிறது. இதுபோன்ற விலை உயர்ந்த பொருள்கள் கிடைக்கும் இந்நாட்டில் அதிகப்படியான பொருள்கள் மறைமுகமாக பலவழிகளில் கடத்தப்பட்டு வருகின்றன. இக்கடத்தலைத் தடுப்பதற்காக சுரங்கத்தை சுற்றிப் பெரிய அளவில் சுவரையும் எழுப்பியுள்ளது அந்நாட்டு அரசு. இந்நாட்டில் பெரும்பாலான மக்கள் தங்களுடைய வீட்டின் பின்புறங்களில் பள்ளம் தோ...